கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 August, 2016

காவல் நிலையத்தில் இப்படித்தான் இருக்குமோ

நம்ம ஊர் போலீஸ் ஸ்டேஷன் போனா...
போலீஸ்காரர்கள் பேசுகிற மொழிக்கு அர்த்தம் இப்படித்தான் இருக்கும்...
அந்தப்பக்கம் போகாதவங்க தெரிஞ்சிக்கங்க...!

"வாங்க சார்!" 
-போலீஸ்காரர்களை நன்கு புரிந்த அரசு ஊழியர் சங்கத் தலைவர்.
 
"வாப்பா!" 
- கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிற தற்குறி.
 
 "வாடா...!" 
-சில்லுண்டி கேசில் அடிக்கடி சந்திக்கிற ஆசாமி.
 

"வாய்யா!" 
-அடிக்கடி புகார் கொடுக்க வருபவர்.
 

"வாங்க தலைவா!" 
-சில்லறை திருட்டுகளுக்கு ஜாமீன் எடுக்க வருபவர்.
 

 "வா தலைவா!" 
- இரவு குடிக்கு ஏதாவது தேற்றித் தருபவர்.
 

 "வாங்க..ஒன்னும் விஷேசம் ஏதுமில்லீங்க..
நீங்கதான் சொல்லணும் !"
- தினசரி நிருபர்.

"வாடா..வா...உன்னதான் எதிர் பார்த்தோம்!" 
- சில்லறை தகராறு ஆசாமி.
 

 "வாங்க தலைவரே!"
அடிக்கடி தகவல் உரிமை சட்டப்படி மனு போடும் டம்மி பீஸ்.
 

 "எஸ்.ஐ. ரவுண்ட்ஸ் போயிருக்கார். 
போயிட்டு சாயங்காலம் வாங்களேன். பேசி முடிச்சிரலாம். சாப்பிட்டு சின்ன தூக்கம் போட்டுட்டு வந்துடுங்களேன்."
-எதோ ஒரு லட்டர் பேடு கட்சி பிரமுகர்.
 

 "அடிக்கடி வந்து தொல்ல பண்ணாதீங்க. நெறைய வேலை கெடக்குது. இப்ப எதுவும் நடக்காது. அடுத்த திங்கள் கிழமை வாங்க! உங்க அவசரத்துக்கு நடக்காது! " 
-நம்மளைப் போன்ற அப்பாவி கோவிந்தன்கள்!


எப்பவும் காவல்துறை தன் கடமையை செய்யுது...
இது சும்மா நகைச்சுவைக்காகத்தான்...! (எஸ்கேப்.....)

1 comment:

  1. ஆஹா... சரியாச் சொன்னீங்க....
    சூப்பர்... கலக்கல்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...