கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 April, 2016

இதுதாங்க கோடைக்கேற்ற உணவு..!



காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அந்தந்த சீசன்களில் வரும் நோய்களுக்கு பலரும் ஆளாக நேரிடுகிறது. அதாவது, மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, குளிர் காலத்தில் சரும பாதிப்பு, வெயில் காலத்தில் உடல் உஷ்ணம், கட்டி போன்றவை ஏற்படுகிறது. எனவே, அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் நாம் உணவு முறைகளையும் மாற்றிக் கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் தற்போது கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுகளைப் பார்க்கலாம்.

மதிய உணவில், வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகள் சேர்ந்த அல்லது ஒரு காய்கறி சேர்க்கப்பட்ட ரைத்தா சாப்பிடுவது நல்லது. இதில் கொத்துமல்லியும் அவசியம். இதனை சாப்பிடுவதால், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும். 
 

நமது உணவில் பெரிய வெங்காயத்துக்குப் பதில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.


கார உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். காரக் குழம்பு வைத்தே ஆக வேண்டும் என்றால், வெந்தயக் கீரை அல்லது வெந்தயக் குழம்பு வைக்கலாம். வெண்டைக்காய் போன்ற குளிர்ச்சியாக காய்கறிகளை சேர்த்து காரக்குழம்பு வைக்கலாம். இதனால் காரக் குழம்பின் உஷ்ண பாதிப்பு குறையும்.


அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில், ஊறவைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம். 


நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு, கோடைக் காலம் நோயை அதிகரிக்கும் காலமாக அமையும். எனவே, இவர்கள் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சுகம் பெறலாம்.


நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய், கோஸ், தக்காளி போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.


மாம்பழ சீசனில் மாம்பழம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அப்படியே விரும்பி சாப்பிட்டுவிட்டால் ஏற்படும் உஷ்ணத்தைத் தவிர்க்க, இரவில் ஒரு டம்ளர் பால் குடித்து வரலாம். 

மதியம் 11 மணியளவில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஒரு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.


கோடைக் காலத்தில் அதிக வியர்வை மூலம் உப்பு வெளியேறுவதால் உப்பு கலந்த பண்டங்கள் அன்றாட உணவில் இடம்பெறுவது நல்லது.


உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொத்துமல்லிக்கு உள்ளது. எனவே, வீட்டில் சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அரைத்தால் சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இந்த முறையை எந்த பருவ காலத்துக்கும் பயன்படுத்தலாம். 

எண்ணெய் சேர்த்து செய்யும் பண்டங்களை வெயில் காலங்களில் குறைத்துக் கொள்ளலாம். பூரி, வடை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால் வெயிலில் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
பாட்டி வைத்தியம்

வெயில் கால வியர்வையின் காரணமாக தலையில் சேரும் அழுக்கு, பேன் பொடுகு ஆகியவை போக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் இந்த மூன்று பிரச்னையும் தீரும்.

வெயிலால் ஏற்படும் உடல் சூடு குறைய வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் போதும்.

விளா மரத்தின் இலையை குளியல் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சொரி, சிரங்கு மற்றும் வியர்க்குரு போன்றவை நீங்கும்.

முருங்கை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும், பொடுகுத் தொல்லையும் இருக்காது.

மஞ்சள், ஆவாரம்பூ  இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் கற்றாழை நாற்றம் ஏற்படாது. உடலும் அழகாகும்.

மகிழ மர இலையை பன்னீர் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் விலகும்.

புளியங் கொழுந்தையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்து வந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம்.

நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.

கருந்துளசியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் உடல் நாற்றம் போவதுடன் தோல் நோய்களும் குறையும்.

திருநீற்றுப் பச்சிலையின் விதையை தண்ணீரில் ஊற வைத்துக் குடித்து வந்தால் உஷ்ண நோய்கள் விலகும். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=3392#sthash.ksZ1d4PN.dpuf

பாட்டி வைத்தியம்

வெயில் கால வியர்வையின் காரணமாக தலையில் சேரும் அழுக்கு, பேன் பொடுகு ஆகியவை போக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் இந்த மூன்று பிரச்னையும் தீரும்.

வெயிலால் ஏற்படும் உடல் சூடு குறைய வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் போதும்.

விளா மரத்தின் இலையை குளியல் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சொரி, சிரங்கு மற்றும் வியர்க்குரு போன்றவை நீங்கும்.

முருங்கை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும், பொடுகுத் தொல்லையும் இருக்காது.

மஞ்சள், ஆவாரம்பூ  இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் கற்றாழை நாற்றம் ஏற்படாது. உடலும் அழகாகும்.

மகிழ மர இலையை பன்னீர் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் விலகும்.

புளியங் கொழுந்தையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்து வந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம்.

நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.

கருந்துளசியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் உடல் நாற்றம் போவதுடன் தோல் நோய்களும் குறையும்.

திருநீற்றுப் பச்சிலையின் விதையை தண்ணீரில் ஊற வைத்துக் குடித்து வந்தால் உஷ்ண நோய்கள் விலகும். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=3392#sthash.ksZ1d4PN.dpuf
பாட்டி வைத்தியம்

வெயில் கால வியர்வையின் காரணமாக தலையில் சேரும் அழுக்கு, பேன் பொடுகு ஆகியவை போக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் இந்த மூன்று பிரச்னையும் தீரும்.

வெயிலால் ஏற்படும் உடல் சூடு குறைய வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் போதும்.

விளா மரத்தின் இலையை குளியல் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சொரி, சிரங்கு மற்றும் வியர்க்குரு போன்றவை நீங்கும்.

முருங்கை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும், பொடுகுத் தொல்லையும் இருக்காது.

மஞ்சள், ஆவாரம்பூ  இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் கற்றாழை நாற்றம் ஏற்படாது. உடலும் அழகாகும்.

மகிழ மர இலையை பன்னீர் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் விலகும்.

புளியங் கொழுந்தையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்து வந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம்.

நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.

கருந்துளசியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் உடல் நாற்றம் போவதுடன் தோல் நோய்களும் குறையும்.

திருநீற்றுப் பச்சிலையின் விதையை தண்ணீரில் ஊற வைத்துக் குடித்து வந்தால் உஷ்ண நோய்கள் விலகும். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=3392#sthash.ksZ1d4PN.dpuf

2 comments:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...