கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 November, 2010

கி, கீ, கு, கூ வரிசை பழமொழிகள்

* கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
* கிட்டாதாயின் வெட்டென மற
* கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
* கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
* கீர்த்தியால் பசி தீருமா?
* கீறி ஆற்றினால் புண் ஆறும்.
* குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
* குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
* குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
* குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
* குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
* குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
* குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
* குணத்தை மாற்றக் குருவில்லை.
* குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
* குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
* குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
* குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
* குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
* குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
* குப்பை உயரும் கோபுரம் தாழும்.
* குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
* கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
* குரங்கின் கைப் பூமாலை.
* குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
* குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
* குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
* குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
* குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
* குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
* குரைக்கிற நாய் கடிக்காது;
* குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
* குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
* குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
* குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
* குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
* கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
* கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
* கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
* கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...