கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 November, 2010

எ ஏ வரிசை பழமொழிகள்

* எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
* எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
* எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
* எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
* எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
* எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
* எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
* எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
* எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
* எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
* எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
* எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
* எதார்த்தவாதி வெகுசன விரோதி.
* எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
* எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
* எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
* எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
* எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
* எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
* எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
* எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
* எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
* எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
* எலி அழுதால் பூனை விடுமா?
* எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
* எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
* எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
* எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
* எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
* எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
* எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
* எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!
* எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
* எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
* எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
* எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
* எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
* எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
* எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஓர் உழவு.
* எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
* எறும்புந் தன் கையால் எண் சாண்
* ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
* ஏரி நிறைந்தால் கரை கசியும்.
* ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
* ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
* ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
* ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
* ஏழை என்றால் எவர்க்கும் எளிது
* ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
* ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்
* ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...