கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

15 November, 2010

உ. ஊ வரிசை பழமொழிகள்

* உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
* உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
* உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
* உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
* உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
* உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
* உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
* உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
* உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
* உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
* உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
* உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
* உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
* உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்
* உரம் ஏற்றி உழவு செய்
* உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
* உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
* உலோபிக்கு இரட்டை செலவு.
* உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
* உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
* உளவு இல்லாமல் களவு இல்லை.
* உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
* உள்ளது போகாது இல்லது வாராது.
* உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
* உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
* உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
 * ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
* ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
* ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
* ஊண் அற்றபோது உடலற்றது.
* ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
* ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
* ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
* ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
* ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
* ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...